விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு
விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு
திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாமானிய மக்கள் நல கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் ஜோசப் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜோசப் செய்தியாளர்களிடம் பேசுகையில்,..
“திருச்சி மாவட்டம் நத்தமாடிப்பட்டி கீழக்குறிச்சி கிராமத்தில், அந்தோனியார்புரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்கள் அதன் எல்லையை மீறியும், கட்டிட விதிகளையும் மீறி, பொது சாலையையும் சேர்த்து ஆக்கிரமித்து கட்டப்படுகிறது. இந்த சாலை ஏற்கனவே மிகவும் குறுகிய தேசிய நெடுச்சாலையாக இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை உரிய வழிமுறைகளை பின்பற்றி கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என தெரிவித்தார்.
Comments are closed.