திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் ₹.10 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் தூத்துக்குடி அனுப்பி வைப்பு!

0

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இந்நிலையில் திருச்சி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிடும் பொருட்டு போர்வைகள், சேலை, கைலி, துண்டு, பாய், பேஸ்ட், பிரஸ், சர்க்கரை, ரவை, கோதுமை, அரிசி, பிஸ்கட், சேமியா, பால் பவுடர், நாப்கின், மெழுகுவர்த்திகள் என ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் தமுமுக திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது தலைமையில் முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்