திருச்சியில் வஃக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மமக கண்டன ஆர்ப்பாட்டம் – 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024-ஐ கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில், பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும் 28 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது கண்டன கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

இதில் தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான், விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு, தமுமுக துணை பொது செயலாளர் மைதீன் சேட் கான், மௌலவி சிராஜுதீன் மன்பஈ, மகளிர் பேரவை மாநில பொருளாளர் ஷான் ராணி ஆலிமா உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முன்னதாக மேற்கு மாவட்ட மமக செயலாளர் இப்ராஹிம் வரவேற்புரையாற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
வக்ஃபு வாரியங்களை முடக்கி, வக்ஃபு சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃபு திருத்த மசோதா 2024-ஐ முஸ்லிம்களும், மதசார்பற்ற கட்சிகளும் கடுமையாக எதிர்ப்போம் எனவும், இந்த மசோதா அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்துள்ள பல உரிமைகளை பறிக்கும் வகையிலும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை பாரபட்சமாக கருதும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இறுதியாக கிழக்கு மாவட்ட மமக செயலாளர் அஷ்ரப் அலி நன்றியுரையாற்றினார்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்