பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை!

பேரரசு பெரும்பிடுகு முத்தரையர் 1350 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், பழனியாண்டி, கதிரவன், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ள நிலையில் 200க்கும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்