தனியார் பள்ளியை மிஞ்சிய அரசு உயர்நிலைப்பள்ளியின் கட்டிடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில், ₹.18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி வைத்து பள்ளியை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன் மற்றும் துறை அலுவலர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இப்பள்ளியில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் 36 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் நூலகம், ஆய்வகங்கள் மற்றும் போதுமான அளவில் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் அரசு பள்ளியா இது என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
Comments are closed.