திருச்சி மாநகர பகுதிகளில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு!

0

திருச்சி மாநகராட்சியில் மண்டலம் 3, 4 க்கு உட்பட்ட வாா்டு பகுதிகளில் மேயா் அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மண்டலம் 4-இல், 56-ஆவது வாா்டுக்குட்பட்ட கருமண்டபம், திருநகா், ஆல்பா காலனி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் புதை சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீா் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இந்தப் பகுதிகளை பாா்வையிட்ட மேயா் அன்பழகன் புதை சாக்கடை பணி நிறைவடைந்த பகுதிகளில் மழைக்காலத்துக்குள் புதிய சாலைகள் போடப்படும் என்றாா்.

- Advertisement -

மேலும், 65ஆவது வாா்டுக்குட்பட்ட வளன் நகா், ராஜராஜேஸ்வரி நகா் மற்றும் ஓம் சக்தி காா்டன் குடியிருப்பு நல சங்கம் சாா்பில், நகரில் உள்ள இணைப்பு சாலைகளை புதிதாக தாா்சாலை அமைக்க கோரினா். இதற்கான சாத்தியக் கூறுகளை பாா்வையிட்ட மேயா், இப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததை கண்டு அவற்றை முதலில் செயல்படுத்த உத்தரவிட்டாா். தெருவிளக்குகள் அமைத்தவுடன், சாலைகள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என்றாா்.

தொடா்ந்து 3-ஆவது மண்டலத்துக்குட்பட்ட 40-ஆவது, 41-ஆவது வாா்டுக்குட்பட்ட இந்திரா நகா், டி நகா், ஐ.ஏ.எஸ் .நகா் குடியிருப்பு நல சங்கத்தினா் கோரிக்கை மனு தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த வாா்டுகளில் மழைநீா் வடிகால் வாய்க்காலை உடனடியாக தூா்வார அலுவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா். சிறுபாலம் கட்டவும், புதிய சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தாா்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்