150 வாட்ஸ் திறன் கொண்ட 20 LED விளக்குகளை கூடிய மின்கம்பத்தை பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்தார் -கே.என்.நேரு
150 வாட்ஸ் திறன் கொண்ட 20 LED விளக்குகளை கூடிய மின்கம்பத்தை பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்தார் –கே.என்.நேரு

நமது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் சார்பில் மக்களுக்கான நலத்திட்டங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து வருகிறார்.அந்த வகையில் புலி மண்டபம் முதல் திருவரங்கம் ராஜகோபுரம் வரை டிராகன் வடிவமைப்புடன் கூடிய மின்கம்பத்தில் அமைக்கப்பட்ட 150 வாட்ஸ் திறன் கொண்ட 20 LED விளக்குகளின் பயன்பாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் .
இந்நிகழ்வில், திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோருடன் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed.