ஜே கே சி அறக்கட்டளை சார்பில் 36 ஆண்டுகள் சமூகநல சாதனை முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பெருமிதம்..

36 ஆண்டுகள் சமூகநல சாதனை

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் 36 ஆண்டுகள் சமூகநல சாதனை முனைவர் பா ஜான் ராஜ்குமார் பெருமிதம்..

- Advertisement -

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கடந்த 36 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், முதியோர், பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல் மற்றும் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்குதல், விழிப்புணர்வு கூட்டங்கள், நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் நடத்தி வருகின்றனர் , தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வரும், சமூக ஆர்வலர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் சேவையை பாராட்டி, மேலும் பல சேவைகளை செய்வதற்கு உந்துதலாக சமூக சேவகர் மக்கள் சேவகர் போன்ற சேவகர் விருது வழங்கி கௌரவப்படுத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, அந்த வகையில் இன்று 23.05.25
திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயம் சார்பில் 50 ஆண்டுகால பொது நல சேவையை பாராட்டி மிஷனரி பெஞ்சமின் நேசமணி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது,
திருச்சி ஏர்போர்ட்
எப் சி ஏ திருச்சபை பேராயர் ஆபிரகாம் தாமஸ், ஐ சி எப் பேராயம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.அருள் ,
ஐ சி எப் பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து விருது வழங்கி கௌரவப்படுத்தினர்.
அப்போது ஜே கே சி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனைவர் பா. ஜான் ராஜ் குமார் அவர்கள் கூறுகையில் நாங்கள் ஜே கே சி அறக்கட்டளையின் சார்பில் கடந்த 36 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்,சேவைகள் செய்து வருகிறோம், இதுபோன்ற பொது சேவையில் ஈடுபடும் பொழுது முழு மனதிருப்தி ஏற்படுகிறது அதோடு நமது மூலம் பலரின் கஷ்டங்கள் தீருகிறது என்றால் அதற்காக நாங்கள் எவ்வளவு கஷ்டப்படவும் தயாராக இருக்கிறோம் என்றும் எங்களது சேவையை முழு நேர சேவையாக தொடர்ந்து செய்து வருகிறோம் என்று பெருமிதமாக குறிப்பிட்டார், இதுபோன்று அனைவரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பல்வேறு சேவைகளையும் செய்வதற்கு இளைஞர்கள் மகளிர்கள் என அனைவரும் முன்வந்து செய்ய வேண்டும் அப்பொழுதுதான் நமது நாட்டில் ஆதரவற்றவர்கள், முதியோர்கள், பெண்கள், ஏழ்மை சூழ்நிலை இருப்பவர்கள் வாழ்க்கை தரம் உயர்வு பெறும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்