திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் வெளியிட்டதோடு வைகோ 75 சாரம்சங்கள் கொண்ட அறிக்கையை முழுமையாக வாசித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் :
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். தமிழக முதல்வர் திராவிட மாடல் அரசை இந்தியாவிற்கே முன்மாதிரியாக எடுத்து செல்கிறார். திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மதிமுகவிற்காக உழைத்து வருகின்றனர் – கூட்டணியான எங்களுக்குக்காக – அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பெல் தொழிற்துறை நலிவடைந்து உள்ளது – இதில் இருந்து நீங்க நடவடிக்கை எடுப்போம்.
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்சி நிறுவனம் – ஸ்ரீரங்கத்தில் கொண்டு வரப்படும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா கூட்டனி தான் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகிறது – நாடு முழுவதும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று வேண்டுமென்றால் அவர்கள் கூறிக் கொள்ளலாம்.
இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு. தமிழ் இனத்தின் முதல் எதிரி டக்லஸ் தேவானந்தா தான். ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது தான் கச்சத்தீவு – அன்றைய காலகட்ட நெருக்கடியில் காரனமாக மத்திய அரசு கச்சத்தீவை கொடுத்த போது முழுமையாக எதிர்த்தவர் கலைஞர் கருணாநிதி.
கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனிச் சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதனால் தான் தீப்பெட்டியை தேர்தெடுத்தோம். தேர்தல் ஆனையம்
மோசடி செய்து விட்டது – சின்னம் ஒதுக்குவதில். 5.9 சதவீதம் இருந்தாலே 6 ஆக எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் பம்பரம் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் வேண்டுமென்றே தேர்தல் ஆணையம் செயல்பட்டு விட்டது.