திருச்சியில் லித்தியம் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

திருச்சியில் லித்தியம் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஈரோட்டில் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் உள்ள அரசுகளில் ஒப்பந்தம் செய்து இந்த நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில், ராமலிங்கத்தின் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ராமலிங்கம் கட்டுமான நிறுவனம், ஆழ்வார்பேட்டை எஸ்பிஎல் அலுவலகம் ஆகிய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக ராமலிங்கம் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் சோதனை நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து திருச்சி – கல்லணை சாலையில் டாக்டர் தோப்பு அருகே ஜஸ்கான் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (JASCON ) என்ற நிறுவனமானது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக வில்சன் மைக்கேல் உள்ளார். மேலும் இந்த நிறுவனத்தில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், சூரிய ஒளி மின்சாதனங்கள் மற்றும் ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜஸ்கான் எனர்ஜி நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை ராமலிங்கம் தன்வசம் வைத்துள்ளதாக
கூறப்படுகிறது. ஆகையால் நேற்று அதிகாலை இனோவா காரில் வந்த 6 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இன்று 2 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்