பைக்கில் இருந்து தவறி விழுந்து ஏட்டு பலி
பைக்கில் இருந்து தவறி விழுந்து ஏட்டு பலி
திருமயம் தாலுகா நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டு ஆக பணிபுரிபவர் சதீஷ்(40). இவர்

நேற்று பணிமுடிந்து நமணசமுத்திரம் திருவப்பூர் பைபாஸ் ரோடில் பைக்கில் சென்றபோது மழை பெய்துள்ளது. அப்போது அகரப்பட்டி விலக்கில் திரும்பியபோது ரோடில் பைக் வழுக்கி சரிந்தது. இதில் சதீஷ் தலையில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். தகவல் அறிந்த போலீஸ் எஸ்.பி அபிஷேக் குப்தா,டிஎஸ்பி அப்துல்ரகிமான்,திருமயம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார்,எஸ்ஐ.நதியா ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Comments are closed.