திருக்கோயிலில் முடி இறக்கும் பணி செய்யும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் – தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம்
திருக்கோயிலில் முடி இறக்கும் பணி செய்யும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் – தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகரத்தின் சார்பாக பொங்கல் விழா மற்றும் 2024 to 2025 கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கும் விழா நடைபெற்றது,
சங்க வளர்ச்சிக்கான விழாவில் முடி திருத்தும் தொழிலாளர்கள் 120 குடும்பத்திற்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது,
விழாவில் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் டாக்டர் சுரேஷ் சிறப்புரை ஆற்றினார், மாவட்ட பொருளாளர் கலைமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்து, நகர பொருளாளர் சங்கர் வரவேற்பு உரையாற்றினார். நகரத்தின் செயலாளர் ராஜலிங்கம் அவர்கள் நன்றி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஜெய் அண்ட் ஜெய் குழுமா அறக்கட்டளையின் நிறுவன சிங்கப்பூர் தொழில் அதிபர் சேவை செம்மல் ஜெய் அவர்களுக்கு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மற்றும் மகளிர் அணிகள் மற்றும் இணை துணை நிர்வாகிகள் உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. ஸ்ரீரங்கம் மாநகரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

2.முடி திருத்தும் தொழிலாளர் நல வாரியத்தில் தலைவராக மருத்துவ சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமாய் தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம்
3. திருக்கோயிலில்
முடி இறக்கும் பணி செய்யும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க கேட்டுக் கொள்கின்றோம்
4.மருத்துவ சமுதாய மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் கல்வி
5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்
5.மருத்துவர் சமூகத்தை தீண்டாமை மற்றும் வன்கொடுமையில் இருந்து காப்பாற்ற பி சி ஆர் சட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கின்றோம்
6.சுதந்திரப் போராட்ட வீரர் வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் தபால் தலை வெளியிட வேண்டு என்று மாநில அரசையும் மத்திய அரசையும் கேட்டுக்கொள்கின்றோம்
7.தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தை காப்பாற்றுவதற்காக நூற்றாண்டுகள் முன்பாக தென்னிந்திய தழுவிய மருத்துவர் சங்கத்தை தோற்றுவித்தவர் மருத்துவ தந்தை எஸ் எஸ் ஆனந்தம் பண்டிதர் அவர்களின் பெயரை சித்த மருத்துவக் கல்லூரிக்கு சுட்டி பெருமைப்படுத்த வேண்டும் என்று ஏழு தீர்மானங்களை நிறைவேற்றினர்.


Comments are closed.