தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. வார இறுதி நாளான, சனி கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,360க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், வார துவங்க முதல் நாளில், தங்கம் விலை சற்று உயர்ந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் ரூ.8,055க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Comments are closed.