- Advertisement -

திருச்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவ சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா – அமைச்சர்கள் பங்கேற்பு!

0

- Advertisement -

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை 100 நிகழ்ச்சிகளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அந்த வகையில் நூறாவது நிகழ்ச்சியாக திருச்சி திருவெறும்பூா் அருகே காட்டூா் ஆயில் மில் பகுதியில் கருணாநிதியின் உருவச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

Bismi

Vagai

விழாவிற்கு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தாா். மாநகர செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏ சேகரன், பகுதி செயலாளர்கள் நீலமேகம், சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வைத்தனா். இதில் அமைச்சா் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருணாநிதி சிலைக்கு அடிக்கல் நாட்டினாா். நிகழ்வில் திமுக நிா்வாகிகள் K.K.K.காா்த்தி, புலவர் செந்தில், கண்ணதாசன், கருணாகரன், கயல்விழி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்