மேட்டூரில் இருந்து கடலுக்கு செல்லும் நீரை அய்யாறு உப்பாற்றுடன் இணைக்க வலியுறுத்தி விவசாயிகள் திடீர் பேரணி!

காவிரி-அய்யாறு- உப்பாறு இணைப்பு திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். இதனால் மேட்டூரில் இருந்து செல்லும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க முடியும். ஐந்து மாவட்ட ஏரி குளங்கள் நிரம்பி 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும். இந்த கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 100 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து திருச்சி முசிறி கைகாட்டியில் இருந்து சார்பதிவாளர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, சார் பதிவாளரிடம் மனு அளித்தனர். விவசாயிகளின் திடீர் பேரணியால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்