44வயது பெண்ணுக்கு இரட்டை நுரையீரல் மாற்று சிகிச்சை – குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை சாதனை!

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கவிதா (44). இரண்டு பெண் குழந்தைகளின் தாயான அவருக்கு முடக்குவாதம், நுரையீரல் பிரச்சனை இருந்தது. இதனால், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவும், ஆக்சிஜன் துணையுடனும் வாழ்ந்து வந்த அப்பெண், ஆறு மாதங்களுக்கு முன், குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு நுரையீரல் சுருக்க பிரச்சனை ஏற்பட்டு, நுரையீரல் கெட்டியாக மாறியிருந்தது தெரியவந்தது. இதன் விளைவாக, மூச்சுவிடுதலில் பிரச்சனை இருந்ததுடன், அது அவரது இதயத்தையும் கடுமையாக பாதித்திருந்தது.

அப்பெண்ணுக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இதய மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற சூழலை அவர் கடந்து விட்டார். ஒரே நேரத்தில் இரண்டு நுரையீரல்களையும் உறுப்பு மாற்றம் செய்து சிகிச்சையளிப்பது என்பது, அறுவை சிகிச்சை துறையில் முக்கி நிகழ்வாகும். இச்சிகிச்சைக்கு, 8 மணி நேரம் ஆனது. இந்த அறுவை சிகிச்சை, இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குனரும், முதுநிலை மருத்துவ ஆலோசகருமான ஸ்ரீநாத் விஜயசேகரன், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான, 30 பேர் கொண்ட குழு வெற்றிகரமாக செய்தது.

அறுவை சிகிச்சை நடந்த பல வாரங்களுக்கு பிறகு, அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். அவரால், தன்னையும், தனது மகள்களையும் தற்போது கவனித்துக்கொள்ள முடிகிறது. அவர் தனது வாழ்நாள் முழுவதும், நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், அண்மையில் அவரது பயாப்ஸி பரிசோதனையின் முடிவுகளின் படி, உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட அவரது நுரையீரல்கள் சிறந்த முறையில் இயங்குகின்றன.

- Advertisement -

இது குறித்து, ரேலா மருத்துவமனையின் தலைவர் முகமது ரேலா கூறுகையில்,…

இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பது சிறப்பான விஷயமாகும். உயிர்காக்கும் இத்தகையை சிகிச்சை இருப்பது நோயாளியே இதற்கு முன் அறிந்திருக்கவில்லை. நோய் முற்றிய நிலையில் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சையே தேவை என்ற நிலை இருந்தது. நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ‘நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை’ அவர்களது உயிரை காக்கும் என்பது தெரிவதில்லை. இது குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். உறுப்பு தானத்தையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் வாழ்க்கையை வாழ்வதற்கான மற்றுமோர் வாய்ப்பை, நோயாளிகளுக்கு வழங்கி விடுகிறோம் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்