திமுக கூட்டணி மீண்டும் மக்கள் செல்வாக்கோடு ஆட்சியை கைப்பற்றும் – திருமாவளவன் பேட்டி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்,..
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த நிமிடம் வரையில் திமுக தலைமையிலான கூட்டணி தான், கூட்டணி என்கிற வடிவத்தோடு உள்ளது. எதிர்க்கட்சிகள் இன்னும் கூட்டணி என்கிற வடிவத்தையே எட்டவில்லை. அதிமுகவும், பாஜகவும் நாங்கள் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அது தொடருமா என்று தெரியாது. அதே கூட்டணியில் இடம் பெற்று இருந்த பாமக இன்னும் அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர்கள் எந்த அணியில் இருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆகவே அவர்கள் இன்னும் ஒரு கூட்டணியாகவே வடிவம் பெறவில்லை என்பதுதான் உண்மை.
நடிகர் விஜய் அதிமுக கூட்டணியிலே இலையலாம் என்பது குறித்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு அந்த கூட்டணியிலே அவரும் ஒரு பங்குதாரராக செல்வாரா, அல்லது தனது தலைமையில் கூட்டணியை அமைப்பாரா என்பதெல்லாம் தெரியாது. எதிர்க்கட்சிகளிடையே ஒரு ஐக்கியம் உருவாவதற்கு போதிய முகாந்திரம் இல்லை. இந்த தேர்தலை பொருத்தவரையில் திமுக கூட்டணி தான் மீண்டும் மக்கள் செல்வாக்கோடு ஆட்சியை கைப்பற்றும் என நம்புகிறேன்.
இந்தியா கூட்டணி வலுவிழந்து விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு,.. அவர் எதன் அடிப்படையில் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணி தேசிய அளவில் விழிப்பாக, வலுவாக இருக்க வேண்டும் என கூறியிருக்கலாம். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணி தான் இந்தியா கூட்டணியின் ஒரு அங்கம். ஆகவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக இருக்கிறது. அது இந்தியா முழுவதற்கும் இந்தியா கூட்டணிக்கு வழிகாட்டியாகவும் இருக்கும் என தெரிவித்தார்.
Comments are closed.