திருச்சி ஜோன் ஆஃப் ஆர்க் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம், டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது!
செயின் ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேச பள்ளி மற்றும் மாஸ் சிலம்ப அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் திருச்சி அதவத்தூர் பகுதியில் உள்ள செயின்ட் ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேச பள்ளியில் இன்று நடைபெற்றது. பள்ளிகளுக்கு இடையிலான இந்த போட்டியில், பல்வேறு பள்ளிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள், பதக்கங்களும் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற வீரர்கள் குழுவாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்…
திருச்சி மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
எங்களது பள்ளியின் சார்பாக மாணவர்களின் திறமையை வெளிக்கொணர பல்வேறு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் மாணவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி தங்களுடைய வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஆகையால் அவர்களின் எண்ணங்களை திசை திருப்பி, வாழ்க்கையை மேம்படுத்தவும், நல்ல சிந்தனைகளையும், நல்ல கல்வியையும், அறிவாற்றலையும் மேம்படுத்த இது போன்ற விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மாணவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய சிந்தனைகளை சிதற விடாமல், கல்வியில் கவனத்தை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Comments are closed.