திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்!
தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மே 01 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினம்தோறும் அம்பாளும், தாயுமானவர் (சிவபெருமானும்) பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி இன்று காலை மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். மற்றொரு சிறிய தேரில் சண்டிகேஷ்வரர் பரிவார மூர்த்திகள் எழுந்தருளினர்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பலஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் நமச்சிவாய” , “ஓம் சக்தி” என்ற பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் மலைக்கோட்டையை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலை நிறுத்தப்பட்டது. இந்த சித்திரை தேரோட்டத்தில் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Comments are closed.