மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது – மலர்கள் தூவி விவசாயிகள் வரவேற்பு!

டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் காவேரி நீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்ததுடன், தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 2ஆயிரம் கனஅடியாக உள்ளது. அந்த நீர் அப்படியே காவிரிஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

விவசாயிகளை வாழவைக்கும் வகையில் முக்கொம்பு வந்தடைந்த நீரை பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் மலர்தூவியும், நெல் விதைகளை தூவியும் வரவேற்றனர். மேலும் காவிரியை வாழ்த்தும் விதமாக வாழ்த்து முழக்கங்களையும் எழுப்பினர். முன்னதாக காவிரித்தாய் சிலை, கரிகாலசோழன் சிலை ஆகியவற்றிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி மாவட்டம் முக்கொம்புவிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நாளை கல்லணை சென்றடையும். கல்லணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரானது 15 ஆம்தேதி காலை திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இது குறித்து தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் கூறுகையில்..

திறந்து விடப்பட்ட தண்ணீரால் 17.5 லட்சம் ஏக்கர் பயனடைய வேண்டும். தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் போதிய அளவு இல்லை. தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரிடம் பேசி , மே மற்றும் ஜூன் மாதத்திற்கு கொடுக்கக்கூடிய 40 டிஎம்சி தண்ணீரை கொடுக்க கோரிக்கை வைக்க வேண்டும். வங்கிகளில் கடன் வழங்கவும் அதே போன்று கடந்த காலங்களை போல அல்லாமல் தரமான விதைகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி மற்றும் டி கிளை வாய்க்கால்கள் 50 சதவீதம் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. வேளாண் பட்ஜெட்டில் சி, டி வாய்க்கால்களை 2,925 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ₹.120 கோடியில் தூர்வருவதற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தத் தொகை தூர்வாரும் பணிகளுக்கு முழுமையாக செலவிடப்பட்டதா என்பதை தமிழக முதல்வர் கண்காணிக்க வேண்டும். மேலும் விரைவில் வாய்க்கால்களை தூர் வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்