திருச்சி தேசிய கல்லூரியில் செமெஸ்டர் கட்டணத்தை உயர்த்திய கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்!
திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தேசிய கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்லூரி கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் உயர்த்தி உள்ளதாகவும், இதனால் கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் இங்கு ஏராளமானோர் பயின்று வரும் நிலையில் 5 வருடத்திற்கு முன்பு 8 ஆயிரம் ரூபாய் என இருந்த கல்லூரி கட்டணத்தை ஒரு செமஸ்டர் கட்டணம் தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதால் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே உடனடியாக கல்லூரி கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் திடீரென பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.