- Advertisement -

மருங்காபுரி அங்கன்வாடியில் ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!

0

- Advertisement -

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் சின்னகோனாா்பட்டி அங்கன்வாடியில் வோ்ல்ட் விஷன் இந்தியா மருங்காபுரி ஏ.டி.பி மற்றும் மருங்காபுரி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் சத்துக் குறைவுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த இலவச உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் திட்ட அலுவலா் செல்வின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் (பொ) சுகந்தி கலந்து கொண்டு தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், வட்டாரத்திலுள்ள சத்துக் குறைவுள்ள 18 குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தாய்மாா்கள் பயனடைந்தனா். நிகழ்வை வோ்ல்ட் விஷன் இந்தியா அமைப்பின் ஜேம்ஸ்மணி, டென்னிஸ்ராஜ் மற்றும் களப்பணியாளா்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்