திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
முன்னதாக வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டது. இதில் அனைத்துத்துறை அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் ( பயிற்சி) அமித் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் இராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.