பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பேசுவதற்காக அமித்ஷா தமிழகம் வந்திருக்கலாம் – சீமான் பேட்டி!

திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்,

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்.
அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பேச அமித்ஷா தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

- Advertisement -

நான் முருகனுக்கு விழா நடத்தும் போது விமர்சனம் செய்தார்கள்.
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஒவ்வொரு பகுதிகளிலும் கடவுளை
வைத்து அரசியல் செய்வார்கள். கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்தார்கள். ராமரை வைத்து அரசியல் செய்தார்கள். ராமர் கோவில் கட்டி முடித்த பிறகு அது முடிந்து விட்டது. ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை வைத்து அரசியல் செய்தார்கள். தற்பொழுது தமிழ்நாட்டில் வந்து முருகனை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள்.

முருகன் சாய்பாவை போல திடீரென வரவில்லை. பல ஆண்டுகளாக தமிழர்களின் கடவுளாக இருக்கக்கூடிய முருகன் இதற்கு முன்பு அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இவ்வளவு காலம் பாஜக எதுவும் செய்யவில்லை. நாங்கள் முருகனை தூக்கியவுடன், நாமும் முருகனை தூக்கலாம் என என பாஜகவினர் நினைக்கிறார்கள். நான் என் இறையை போற்றுகிறேன் நீங்களும் அதைப்போற்றினால் மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் வழிபட்ட கடவுள்களை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் அது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பாதுகாக்க கிடங்குகள் கட்டப்பட்டது போல், நெல்களை பாதுகாக்க கிடங்குகள் கட்டப்படவில்லை. இதற்கு கோபப்பட வேண்டியது விவசாயிகள் தான். ஒருநாட்டில் அநீதியான மோசமான ஆட்சி நடைபெறுகிறது என்றால், அதனை தேர்வு செய்த மக்களும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்