அதிமுக துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி – முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பங்கேற்பு!
அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைப்பு செயலாளர் முன்னாள் அரசு கொறடா மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி செய்தியாளர்களிடம் பேசுகையில்…
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவதற்காக, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் களப்பணியாற்றுவோம்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் வரும் 18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். பெண் குழந்தைகள், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை இந்த அரசிடம் வலியுறுத்திக் கொண்டே இருப்போம்.
எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது குறித்த கேள்விக்கு.,..
கட்சியில் இருந்து நீக்கபட்டவர்கள், நீக்க்கபட்டவர்கள் தான். பொதுக்குழு, செயற்குழு, தலைமை குழு நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அப்படியே தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்பதற்கு அனைவரும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
Comments are closed.