அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கம், முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பாக சமூக சேவகர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா திருச்சியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது
அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கம், முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பாக சமூக சேவகர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா திருச்சியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது
அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கம், முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பாக சமூக சேவகர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா வருகின்ற மே 17ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் நடைபெறுகின்றது.
விழாவிற்கு கலியுக சித்தர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்குகிறார்.
திருச்சி முன்னாள் பொது சுகாதாரக் குழு தலைவர் தமிழரசி சுப்பையா, நாகலிங்க தேவர், பரமசிவ தேவர், டாக்டர் விஜய் கார்த்திக், ரவி சேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஜே.கே.சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜான் ராஜ்குமார் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கோவை அருள்ஜோதி தபவனம் சிவபுரம் ஸ்ரீலஸ்ரீ மூர்த்திலிங்க தம்பி ரான் சுவாமிகள் சான்றோர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துரை வழங்குகின்றார்கள்.
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் இந்திரஜித், செயலாளர் ஜவகர் ஆறுமுகம், பொருளாளர் யோகா விஜயகுமார், மனித விடியல் டாக்டர் மோகன், டாக்டர் பா.ஜான் ராஜ்குமார். மருத்துவர்கள் மகேஷ், வெள்ளகோயில் முருகேசன், தஞ்சாவூர் முருகேசன், சதீஸ்வர்மன், தாராபுரம் தேவேந்திர குல வேளாளர் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் கணபதி. மருத்துவர்கள் மதிக்குமார், டாக்டர் கார்த்திக், டாக்டர் சிவச்சந்திரன், டாக்டர் விஜய் கார்த்திக், டாக்டர் ஹரி ராமர், டாக்டர் கருணாநிதி, டாக்டர் திரவியம் எழில்.
டாக்டர் பாரதிராஜா, டாக்டர் ராஜ பெருமாள், டாக்டர் கணேசன், டாக்டர் காமராஜ், மதுரை டாக்டர் மோனிஷா, சிவகாசி டாக்டர் கருணாநிதி, டாக்டர் அஸ்மா, டாக்டர் பிரசன்ன வெங்கடேசன்.
பத்திரிகையாளர்கள் சுகுமார்,
வேல் முருகன், பவானி, சகுந்தலாழ் கால்நடை மருத்துவர் டாக்டர் வருணா பிரியதர்ஷினி, ஸ்டீல் சலாவுதீன்ழ் ஆர்.எஸ் பாலாஜிழ் ஆபிரகாம் தாமஸ், பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா. அருள் பாஸ்டர் ராஜன் ஆசிரியர் அலெக்சாண்டர், நாகலிங்க தேவர், பரமசிவ தேவர் ஆகியோர் மக்கள் சேவகர் விருதினை பெற இருக்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை தலைவரும், அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவருமான கே.எஸ்.சுப்பையா பாண்டியன் செய்து வருகிறார்.
Comments are closed.