திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சிஎஸ்ஐ மிசின் பொது மருத்துவமனையும், மேக்சி விஷன் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம், பஞ்சபூர் தூய பவுல் ஆலயத்தில், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறை ஏற்பாட்டில் நடைபெற்றது,
சிஎஸ்ஐ மிசின் மருத்துவமனையின் சமூக நல மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தார்,
மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி திருமதி ஆனி அவர்கள் வழி நடத்தினார்கள்,
இலவச மருத்துவ முகாமை விஷபீபர் கல்லூரி மூன்றாம் ஆண்டு இளங்கலை சமூகப் பணித்துறை மாணவ, மாணவிகள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்,
மாபெரும் மருத்துவ முகாமை திருச்சி தஞ்சை பேராயர் முனைவர் சந்திரசேகரன் ஐயா அவர்கள் தொடங்கி வைத்தார்,
ஆலய ஆயர் சுரேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.