திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம், போதைப்பொருள், கஞ்சா உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பேங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஸ்கூட் விமானம் மூலம் இன்று அதிகாலை 1.05 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் 3 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் தினந்தோறும் கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணங்கள், போதைன்பொருட்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை முற்றிலும் தடுப்பதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி பன்னாட்டு விமான நிலையம் கடத்தல் கூடாரமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
Comments are closed.