திருச்சி அமமுக மாமன்ற உறுப்பினர் ராஜினாமா – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்

தேசிய ஜனநாயக கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் BE, MBA(UK), தேர்தலில் போட்டியிடுவதற்கு முறைப்படி,
தான் வகித்து வந்த மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலையில், மேயர் அன்பழகனிடம் வழங்கினார்.




