2024 மக்களவை தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்ட பின் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் திருச்சி மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளான தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், மாநகர செயலாளர் சீனிவாசன் , கழக அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி , மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார் மற்றும் பலரையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சிகளில் திருச்சி அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர் .










