சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி அமைச்சர்கே.என்.நேரு வாழ்த்து.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து.
அமைச்சர்கே.என்.நேரு அவர்கள் தனது எக்ஸ் தள பதிவில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று.
உடலில் பாதிப்பு இருந்தால் ஊனமுற்றோர் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், “மாற்றுத்திறனாளிகள்” என அனைத்து அரசு ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்து மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதைக்கு அங்கீகாரம் தந்தார் “நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்” அவர் வழியில், மாற்றுத்திறனாளிகளின் உரிமையையும், நலனையும் காக்கும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய தொகை அதிகரிப்பு – மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு – கடற்கரையில் பிரத்தியேக நடை மேடை – உள்ளாட்சி பொறுப்புகளில் நேரடி பணி நியமனம் என ஒவ்வொரு திட்டத்தையும் தனி கவனம் எடுத்து செயல்படுத்தி, மாற்றுத்திறனாளி சகோதர – சகோதரிகளின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறார் “நம் நல்லாட்சி நாயகர்” மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் “ஒரே ஒரு மாற்றுத்திரனாளி கூட மன வருத்தம் அடையக் கூடாது” என்ற உன்னத நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வரும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழியில், மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் சுயமரியாதைக்கும் என்றும் உறுதுணையாக இருப்போம் என இந்நாளில் உறுதி ஏற்போம்..!


Comments are closed.