- Advertisement -

திருச்சி நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் மரக்கன்றுகள் விநியோகம்!

- Advertisement -

திருச்சி காந்தி மார்கெட் இ. பி.ரோடு பகுதியில் நண்பர்கள் சிலம்பக் கூடம் செயல்பட்டு வருகிறது. அதன் ஆசான் சண்முகசுந்தரம், செயலாளர் யுவராஜ் அகியோர் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஆயுத பூஜை விழாவை கொண்டாடும் வகையில் பாரம்பரிய கலைகளான சிலம்பம், கம்பு வாள், கேடயம், மான் கொம்பு, ஈட்டி, சுருள் வாள், சக்கரப்போத்து, நட்சத்திர போத்து, செடி குஞ்சு சக்கை உள்ளிட்ட கலைகளை பயிற்சி எடுத்து வரும் மாணவ மாணவிகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பழ வகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Vagai
Bismi

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 ன் தலைவர் மதிவாணன் மற்றும் தேசிய மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான ஆர்.ஏ.தாமஸ், தடகள விளையாட்டு பயிற்சியாளர் சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கொய்யா, நெல்லி, எலிம்பிச்சை, சீதா உள்ளிட்ட பழ வகையிலான மரகன்றுகளை வழங்கினர்.


இந்நிகழ்வில் கலை சுடர் மணி சிலம்ப ஆசான் ஜெயக்குமார், பேராசிரியர் ரெங்கநாதன், சிலம்ப பயிற்ச்சியாளர்கள் சேஷாத்ரி, கீர்த்திஹரன், வைஷ்ணவி மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்