தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13 ஆவது மாநில மாநாடு – சபாநாயகர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13 ஆவது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு , அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சபாநாயகர் அப்பாவு பேசும்போது….
இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக சாமானிய முதல்வராக திகழ்பவர் ஸ்டாலின். பள்ளிக் கல்வித்துறைக்கு எத்தனையோ இடையூறுகள் என்று பத்திரிக்கையில் செய்தி வருவதை பார்த்து இருப்பீர்கள். சர்வ சிக்ஷா அபியான் என்பதை இந்த ஆட்சியாளர்கள் சமக்ரா சிக்ஷா என மாற்றி உள்ளார்கள். நீங்கள் எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் வர வேண்டிய 5000 கோடி வர வில்லை என்பது தான் வேதனையாக உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் நேரடியாக டெல்லி சென்று கேட்டுக் கொண்டு தான் உள்ளார்கள். 100 நாள் வேலை திட்டத்தில் நிதி கிடைக்காததால் மாநில அரசுக்கு தடுமாற்றமாக உள்ளது. ஒரு ரூபாய் வரை கட்டினால் 19 காசு கிடைக்கிறது, ஆனால் ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு 2 ரூபாய் 30 காசுகள் கிடைக்கிறது. இயற்கை பேரிடர், வளர்ச்சி திட்டங்கள் எதற்குமே நிதி இல்லாமல் இருந்தாலும் 44 ஆயிரம் கோடி ரூபாய் முதலமைச்சர் அள்ளி கொடுத்துள்ளார். நெருக்கடியும் தாண்டி சமாளித்து கொண்டு வருகிறார் முதலமைச்சர். திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு பள்ளிக்கல்வித்துறை பல சாதனைகளை செய்திருக்கின்றது. அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க கோரிக்கை வைத்தவர் அமைச்சர் அன்பில் மகேஷ். 1978, 1985 ஆட்சியில் இருந்த அதிமுக அரசாணை போட்டு ஒரு பணியிடம் கூட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. அதிமுக ஆட்சியில் வெறும் ஆணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் நான் முதல்வன் செயல்படுத்தப்பட்டு பணியிடத்தில் என்ன தேவையோ அதை பள்ளியிலேயே பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து நிதி நெருக்கடியை மாநில அரசுக்கு கொடுத்து வருகிறது என்றார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில்…
எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் எப்படி கருத்து சொல்லலாம். வெற்றியோ தோல்வியோ மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். மக்களை சந்திப்பதற்கே யோசிக்கிறார்கள். திமுக வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் மக்களை நேரடியாக சந்தித்துள்ளோம். மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று இருக்கின்றோம். அதற்கு நிறைய காலம் உள்ளது. நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கின்றோம்.அதனால் தான் மக்களும் எங்கள் பக்கம் நிற்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடு தான் மக்களுக்கான வெற்றி, தமிழ்நாடு முதலமைச்சருக்கான வெற்றி.
தமிழகத்தில் பாலியல் சீண்டல் விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 46 பேர் வழக்கின் முழுமையான அறிக்கை மார்ச் 10 ஆம் தேதி வர உள்ளது. இதில் 11 பேர் குற்றம் நிருபிக்கபடாமல் விடுவிக்கப்பட்டவர்களும் உள்ளார்கள். குற்றம் சாற்றபட்டு நீதிமன்றக் காவலில் உள்ளர்கள். இது குறித்த முழு அறிக்கை மார்ச் மாதத்திற்குள் வரும் என்றார்.
Comments are closed.