திருச்சி பீமநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசக்தி விநாயகர், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சம்வத்சரா அபிஷேகம், நான்காம் ஆண்டு வருஷ அபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது,
தலைவர் அசோக் குமார் தலைமையில் முருகானந்தம் குரு ராஜன் சதீஷ்குமார் சிவராமன் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில், நடைபெற்ற நான்காம் ஆண்டு வருஷம் அபிஷேகம் விழா
இன்று காலை 20.00 மணிக்கு சிவகுமார் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. 5.30 மணி அளவில் காவிரி தாய்க்கு சீர் வழங்கி புனித தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி தொடர்ந்து, காலை 9 மணி அளவில் விக்னேஸ்வரா பூஜை,
மஹா சங்கல்பம், புண்ணியாகவாஜனம், கலச பூஜை, ஸ்ரீ மஹா கணபதி 1008 மூல மந்திர ஆவர்த்தி ஹோமம், ஸ்ரீ ருத்ரா மற்றும் பஞ்ச சுக்ர ஹோமம், ஸ்ரீ சுக்ர ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவிய ஹுதி, பூர்ணா ஹுதி, மகா தீவிர தானம் நடைபெற்றது,அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சிவசக்தி விநாயகர் மற்றும் வீர ஆஞ்சநேயர் ஸ்ரீ சுவாமிகளுக்கு 21 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் மகா தீபாராதனை நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 6:30 மணி அளவில் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு விசேஷ சந்தன காப்பு அலங்காரம், ஸ்ரீ சிவசக்தி விநாயகருக்கு 11 வகையான பட்சணங்களால் மகா நெய் வைத்தியமும், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு 108 வடை மாலையும்,
ஸ்ரீ சிவசக்தி விநாயகருக்கு திரிசதி அர்ச்சனை மகா தீபாராதனை நடைபெற்றது. நான்காம் ஆண்டு வருஷம் அபிஷேகம் விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவில் நிர்வாகிகள் செய்தனர்.