ராஜஸ்தான் அவ்ஷாதாலயா நிறுவனம் சார்பில் ஆயுர்வேதா சித்தா அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு இலவச விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு மற்றும் பாராட்டு விழா திருச்சியில்
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆயுர்வேதா,சித்தா, அக்குப்பஞ்சர் மருத்துவர்கள் டாக்டர் தமிழரசி, டாக்டர் ஜான் ராஜ்குமார், டாக்டர் முனவர், டேவிட் பரமானந்தம், கணேசன், அருள், ஆனந்த், முகமது கனி, யாசிர் அராபத், ஹரி ராமர்.
அண்ணாதுரை, குமரன், அப்துல் ஜலீல், சையது உசேன், காளிமுத்து, தேசியம் பிள்ளை, வெங்கடேசன், சுந்தரமகாலிங்கம், தமிழ்ச்செல்வி, ஷீலா, ஜெயந்தி, சிவக்குமார், ரவி, கஜலட்சுமி, சம்பத் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும் ரூ.3,000 மதிப்புள்ள ஆயுர்வேத மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அனைவருக்கும் பயிற்சி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் ரூ. 3,000 மதிப்புள்ள ஸ்டெத்தாஸ்கோப் அனைத்து மருத்துவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராஜஸ்தான் அவ்ஷாதாலயா பிரைவேட் லிமிடெட் நிர்வாகிகள் சாய்தேவ், பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் டாக்டர் சுப்பையா பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
தமிழகத்தில் 2 லட்சம் சித்த ஆயுர்வேதா மருத்துவர்கள் உள்ளனர். அக்குபஞ்சர் மருத்துவர்களையும் இணைத்தால் 5 லட்சம் பேர் உள்ளனர்.
எங்களது ஆயுர்வேதா சித்தா அக்குபஞ்சர் மருத்துவர்கள்
சங்கத்தில் தற்போது 300 பட்டதாரி மருத்துவர்கள் உள்ளனர்.
100 மருத்துவர்களின் பிள்ளைகளை பட்டம் பெறச் செய்துள்ளோம். இவ்வித டெபாசிட் கைகளும் இன்றி அவர்கள் படிப்பதற்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளோம். ஒட்டுமொத்த பட்டதாரி மருத்துவர்களும் எங்களது சங்கத்தில் விரைவில் இணைந்து விடுவார்கள். நமக்குள் உள்ள வேறுபாடுகளை கலைத்தால் நாம் கண்டிப்பாக சாதிக்கலாம்.
நாங்கள் உங்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறோம். அதற்கு தாங்கள் ஆதரவாக இருக்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியிலேயே சித்த மருத்துவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க தயாராக இருந்தது.
ஆனால் நம்மில் சிலர் தான் அதை கெடுத்து விட்டார்கள். சுப்பையாவுக்கு மட்டும் பெயர் வந்து எதுவும் ஆகப்போவதில்லை. எனக்கு பெயர் எல்லாம் தேவையில்லை தமிழகத்திலுள்ள அனைத்து சித்த மருத்துவர்களும் நல்ல முறையில், பாதுகாப்பான முறையில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
எங்களது சங்கத்தில் உள்ள 2,000 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அனைத்து உறுப்பினர்களும் எனக்கு நன்றாக தெரியும். சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் அழியக்கூடாது. அக்குபஞ்சர் மருத்துவத்தை பாதுகாக்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
ராஜஸ்தான் அவ்ஷாலாயா நிறுவனம் சார்பில் இந்தியா முழுவதும் கரோனா நோயில் இருந்து மக்கள் விடுபட பாடுபட்ட சித்தா, ஆயுர்வேதா, அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த பாராட்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் சித்தா, ஆயுர்வேதா, அக்குபஞ்சர், அனைத்து மருத்துவர்களுக்கும் கோவிட் 19 சர்வீஸ் பாராட்டு விழா நடைபெற்றது.
வருகை தந்த அனைத்து மருத்துவர்களுக்கும் ஆயுர்வேத மருந்துகள் அறிமுகம் செய்து மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

பாராட்டுச் சான்றிதழும் அனைத்து மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது. உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் தீர்க்கவல்லது சித்தா ஆயுர்வேத மருந்துகள் ஆகும். மிகப்பெரிய மருத்துவம் சித்தா, ஆயுர்வேத மருத்துவம். அனைத்து நோய்களையும் அற்புதமாக தீர்க்க கூடிய மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம்.
நமது சிந்து சமவெளி நாகரீகத்தின் அற்புதமான மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம். உலகில் முதல் அறுவை சிகிச்சை செய்தவர் சுஷ்ருதா. ஆயுர்வேத மருத்துவத்த தந்தை சுஸ்ருதா. உலகம் முழுவதும் சித்தா, ஆயுர்வேதா, மருந்துகளை சிறப்பான முறையில் வழங்கிவரும் 70 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ராஜஸ்தான் நிறுவனத்திற்கு தமிழக சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவர்கள் அனைவரும் இங்கே வந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து இங்கே வந்துள்ளார்கள். அனைத்து திறமையான மருத்துவர்களும் இங்கே வருகை புரிந்துள்ளார்கள். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
