திருச்சி உறையூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் தரவு மேலாண்மை பிரிவின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் தரவு மேலாண்மை பிரிவின் மாநில செயலாளர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் திருச்சி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன்,தரவு மேலாண்மை திருச்சி மாவட்ட தலைவர் தர்மராஜ், செயலாளர் சிட்டிபாபு மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில் மோடி காப்பீட்டு திட்ட அட்டைகள் ஏராளமான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது .