திருச்சி வரலாற்றில் அங்கமாக விளங்கும் ஐமால் முகமது கல்லுரியின் கல்வி சேவை மற்றும் சமூக நலச் சேவைகளை பாராட்டி திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை ஐ.சி.எப் பேராயம் சார்பில் விருது வழங்கப்பட்டது
திருச்சியில் சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றிய ஐ மால் முகமது சாகிப் மற்றும் காஜாமியன் ராவுத்தர் இருவரால் 1951ம் ஆண்டு துவங்கப்பட்ட கல்லூரி ஐமால் முகமது கல்லூரி 71 ஆண்டுகள் கல்வி சேவை சமூக நல சேவை ஆற்றி இன்று 12 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்
அது போல் பல்வேறு நலத்திட்டங்கள் நலிந்த கிராமங்களை தத்து எடுத்து கிராம மக்களுக்கு சேவையாற்றி வருவதை பாராட்டி கல்லூரியின் சிறந்த சேவைக்காகவும் 75வது சுதந்திரத்தை போற்றும் வகையில் திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை ஐ.சி.எப் பேராயம் சார்பில் விருது வழங்கப்பட்டது

விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் இஸ்மாயில் முகைதீன் கல்லூரி செயலர் காஜா நஜிமுதின் உதவி செயலர் அப்துஸ் சமது பேராசிரியர் சையத் ஜாகிர் ஹசன் ஆகியோர் பெற்று கொண்டனர் ஜே.கே சி நிறுவனர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் திருச்சி வசந்தம் அரிமா சங்கத் தலைவர் டி.ஜி.ஆர் வசந்தக்குமார் மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.பி ரமேஷ் பேராசிரியர் சா.அருள் ஆகியோர் விருது வழங்கி கெளரவித் தினர் இதில் கல்லூரி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்