திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி 56 வது கல்லூரி விழா – அமைச்சர்கள் பொன்முடி, கே என் நேரு பங்கேற்பு.

0

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபார் கல்லூரியின் 56 வது கல்லூரி தின விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு , மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
பேராசிரியர் மற்றும் மாணவர்களில் சிறந்த

- Advertisement -

ஆய்வாளர் விருதுகள், இக்கல்வியாண்டில் முனைவர் நிறைவு செய்தோருக்கான நூல்களை எழுதி வெளியிட்டோருக்கான பரிசுகள் வழங்கபட்டது.

நிகழ்ச்சிக்குப்பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

மத்திய அரசு யூ.ஜி.சியில் தற்போது ஒரு தேர்வை கொண்டு வந்துள்ளனர், அதில் கூட ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டும்தான் எழுத முடியும் என்று கூறுகிறார்கள். எல்லா மொழியும் இருப்பதில் எங்களுக்கோ அல்லது தமிழக முதல்வருக்கு எந்த வேறுபட்ட கருத்தும் கிடையாது. தேசிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை – அதில் உள்ள தேவையில்லாத சிலவற்றை நீக்கிவிட்டு நாங்கள் மாநில கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறு வகுப்போம். அவர்கள் மூன்றாவது எட்டாவது போன்ற வகுப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என்று சொல்கிறார்கள் அதையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்