திருச்சி – சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு 164 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 164 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு காத்திருப்போர் அறையில் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விமான கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆயினும் கோளாறு சரி செய்ய முடியாமல் தாமதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் விமான நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று முற்பகல் 11.42 மணிக்கு தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு
164 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்