சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு முறையை கடந்த சில ஆண்டுகளாக கேரள போலீசார் கடைபிடித்து வந்தனர். அதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி இல்லாமல் கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக கேரள போலீஸ் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டு ,கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறையை கேரள போலீசார் கடைபிடித்து வந்தனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.
அதோடு முன்பதிவு செய்யாத பக்தர்களும், கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
இதனால் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்குவதை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சபரிமலை கோவில் வளர்ச்சிக்காக அரசு ரூ.140 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்திற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் முன்பதிவை நிறுத்துவது குறித்து அரசுடன் ஆலோசனை நடத்திய பின்பே முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.