சந்திர கிரகணத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை அடைப்பு – கோவில் இணை ஆணையர் தகவல்!

0

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும் . இத்திருக்கோயிலில் நாள்தோறும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு சாத்தப்படும். இந்நிலையில், நாளை மறுதினம் (சனிக்கிழமை) பவுர்ணமி அன்று சந்திரகிரகணம் நிகழ உள்ளதால் அன்று பிற்பகல் 3 மணிக்கு விளக்கு பூஜை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சாயராட்சை பூஜை முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் இணை ஆணையர் கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்