சட்டமன்றத்தில் கிறிஸ்தவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய எம்எல்ஏ இனிகோவுக்கு ஜான் ராஜ்குமார் பாராட்டு

0

தமிழக சட்டமன்றத்தில் கிறிஸ்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜுக்கு ஜான் ராஜ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

திருச்சி ஐ.சி.எப். பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் கூறுகையில் கல்லறைத் தோட்டம் மற்றும் வீடுகளிலே நடைபெறும் ஜெபக்கூட்டங்களுக்கு, தேவையின்றி இடையூறு செய்யும் சமூக விரோதிகளை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இதற்கென ஒரு சரியான வழிகாட்டுதுலை, அரசு, காவல்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் தெரிவித்து, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் தமிழக கிறிஸ்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபையில் பேசிய திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவனத் தலைவருமாகிய முனைவர், இனிகோ இருதயராஜுக்கு திருச்சி ஐசிஎப் பேராயம் சார்பில் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக்  கொண்டுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்