அன்னையர் தினத்தை முன்னிட்டு என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் தொட்டில் ஓசை சிறப்பு நிகழ்ச்சி

0

திருச்சி ராம்ஜி நகர் கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தொட்டில் ஓசை என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில்அ என்.ஆர்.,ஐ.ஏ.எஸ். அகாடமி தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.
கவிதை சித்தர் நெல்லை ஜெயந்தா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது
எனக்கு ஆரம்ப காலத்தில் எனக்கு தமிழ் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியவர் என் அம்மா. எனக்கு தாய் கவிதைகளை சொல்லித்தந்தார். இன்றைக்கு நான் அம்மாவை கவிதையாக வடித்துக்கொண்டிருக்கிறேன்.
தந்தை பெரியார் சொல்வார் எல்லா குழந்தைகளுக்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் தாய் என்று. நான் கல்லூரி காலத்தில் காதல் கவிதைகள் எழுதி இருக்கிறேன். அதன்பின்னர் சமூக சிந்தனையோடு கவிதைகளை எழுத ஆரம்பித்தேன்.
அவ்வாறு நான் எழுதிய ஒரு கவிதை அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி கவனத்திற்கு சென்றது.

- Advertisement -

தஞ்சை நெல் சாகுபடியை மையமாக வைத்து அன்றைக்கு, நன்செய் உண்டு சாகுபடி செய்தோம். இப்போது நஞ்சை உண்டு சாகுபடி செய்கிறோம் என்று எழுதினேன்.
இந்தக் கவிதையை பார்த்து கலைஞர் அவர்கள் முரசொலியில் ஒரு பக்கத்திற்கு எழுதியிருந்தார்.
இந்த உலகில் துறவிகளால் கூட திறக்க இயலாத உறவு என்றால் அது தாய் மட்டுமே.
ஒர் மாலை நாளிதழில் தாயைப் பற்றி நான் எழுதிய கவிதையை பார்த்து மறைந்த மதுரை ஆதீனம் எனது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் போதே அழுதுவிட்டார்.
அம்மாவை நேசிப்பவனும், பூஜிப்பவனும் வாழ்க்கையில் தோற்றதாக வரலாறு இல்லை.
நான் முழுக்க முழுக்க தாயைப் பற்றி எழுதிய தொட்டில் ஓசை புத்தகத்தை எழுத எனக்கு கொரோனா வைரஸ் கைகொடுத்தது. வேலைப்பளு காரணமாக அந்த தொகுப்பை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் இருந்தேன்.இந்த நிலையில் முதல் அலையின் போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தேன். அப்போது 14 நாட்களும் கவிதைகளை எழுதி இந்த தொகுப்பினை பூர்த்தி செய்து விட்டேன்.
ஓரிடத்தில் தாயைப் பற்றி எழுதிய கவிதையில் இறைவன் உன்னை படைக்க நினைத்து தன்னை படைத்துவிட்டான் என்று எழுதியிருப்பேன். தாயின்றி நீ இல்லை .
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆர். விஜயாலயன் பேசும்போது,
கவிஞர் வைரமுத்து இந்த தொட்டில் ஓசை புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியுள்ளார். அதில் பஞ்சபூதங்களையும் ஒப்பிட்டு நீ நிலம் என்னை நீ சுமந்ததால், நீ நீர் என்னை நீ மிதக்க வைத்ததால், நீ நெருப்பு எனக்கு வெளிச்சத்தை தந்ததால் ,நீ காற்று எனக்கு சுவாசத்தை தந்ததால்,நீ ஆகாயம் எப்போதும் என்னை கவனித்துக் கொள்வதால் என நெல்லை ஜெயந்தா எழுதிய கவிதையை மேற்கோள்காட்டி இருக்கிறார் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்