தமிழகத்தில் கஞ்சாவை பறிமுதல் செய்யும் போலீஸ் மற்ற வகை போதை பொருட்களை கைப்பற்றுவதில்லை ஏன்? – ஹெச்.ராஜா கேள்வி!

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல பகுதிகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

பாஜக அமைப்பு தேர்தல் மற்றும் கிளை கமிட்டி தேர்தல் நவம்பர் 11ஆம் தேதி முதல் நடைபெறும். அதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் மண்டல் கமிட்டி மற்றும் மாவட்ட அமைப்புக்கும், அதனைத் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய தலைமை தேர்வு நடைபெறும்.

திமுக 62 ஆம் ஆண்டுக்கு முன்பு சென்று கொண்டிருக்கிறது. திமுகவின் அயலக அணி போதைபொருள் கடத்த மட்டுமே வைத்துள்ளனர் என்று எண்ணினோம், ஆனால் தற்போது தேசவிரோத செயலாற்றும் அமைப்பாக உள்ளது.
இந்தியாவின் இரு மாநிலங்கள் இல்லாமல் ஒரு இந்திய வரைபடத்தை திமுக அயலக அணியினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். திமுகவில் சிறுபிள்ளைகள் தலையீட்டால் பல சிக்கல்கள் உருவாகி வருவதாக திமுகவின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர், மக்களும் இதனை எண்ணி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் என்கிற உதவாக்கரை ஆளுநர் பற்றி பேசிய பேச்சு மோசமாக உள்ளது. ஆளுநரை அடிப்பேன் என்ற வகையில் உள்ளது. இந்த வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக எதிர்வினை ஆற்றினால் என்னவாக இருக்கும். திமுகவின் தலைமை ஒரு கீழ்த்தரமாக உள்ளது. 62 இல் நடக்காமல் போனது தற்போது தமிழகத்தில் நடக்கும், தேச விரோதிகள் கையில் தமிழகம் சிக்கிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

ஒரு காலத்தில் காங்கிரஸ் கையில் இருந்த சிபிஐ (CBI) , பாஜகவின் ஆட்சியில் தவறாக பயன்படுத்துவதில்லை, அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் தற்போது எடப்பாடி தரப்பினர் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

திருமாவளவன் பட்டியல் சமுதாய மக்களுக்கான தலைவர் அல்ல, மாற்று சமுதாயத்தினரையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுவதும், அந்நிய நாட்டின் கைக்கூலியாக தமிழகத்தில் இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். மேலும் திருமாவளவன் பட்டியல் வெளியேற்றம் வேண்டும் என விரும்பும் தேவேந்திர குல சமுதாயத்தினர் திருமாவளவன் ஏற்பதில்லை, ஒரு மதமாற்ற தலைவராக செயல்படுகிறார். தமிழகத்தில் திருமாவளவனுக்கு எங்கும் செல்வாக்கு இல்லை, திமுக அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து 6 சீட் ஒதுக்கி உள்ளது. அப்போது மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் மட்டுமே செல்வாக்கு இருந்தது. ஆனால் திருமாவளவனுக்கு எந்த செல்வாக்கும் இல்லை.
திமுக கூட்டணியில் சலசலப்பு உள்ளது என்பது திருமாவளவன் மற்றும் செல்வப் பெருந்தகை பேசி வருவதை காட்டுகிறது.

சென்னையை வருண பகவான் காப்பாற்றி விட்டார், ஆபத்து இன்னும் நீங்கவில்லை.
ரயில் விபத்துக்கள் கூடிவிட்டது என்பது தவறான தகவல். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு ஆண்டுக்கு 121 விபத்துக்கள் நடந்தது. ஆனால் பாஜக ஒன்பது ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 71 விபத்துக்கள் மட்டுமே நடைபெறுகிறது. ரயில்வே துறையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டினால் நிவர்த்தி செய்யப்படும்.
அமைப்பு தேர்தல்கள் நடத்தவேண்டி உள்ளதால் தற்போது பாஜக தரப்பில் ஏதும் போராட்டங்கள் நடைபெறவில்லை. தமிழகத்தில் கோவில் சொத்துக்களை ஆட்டையபோடும் கட்சி என்றால் அது திமுக கட்சி என்பது மாவட்டம் தோறும் நடைபெறும் செயல்கள் மூலம் தெரிய வருகிறது.

நடிகர் விஜய் பெரியாரை பின்பற்றட்டும். இதன்மூலம் அவர் தனது நிறத்தை காட்டிக் கொள்வதை வரவேற்கிறேன். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள்.

கேரளாவில் பாஜக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ் ஒரு முடிந்துபோன சகாப்தம்.

தமிழக காவல்துறை பயங்கரவாதியை கூட கைது செய்யவில்லை, கஞ்சாவை பறிமுதல் செய்யும் போலீஸ் மற்ற வகை போதைபொருட்களை கைப்பற்றுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்