திருப்பரங்குன்றம் வழக்கை டிசம்பர் 9க்கு ஒத்திவைத்தது -உயர் நீதிமன்றம்.

திருப்பரங்குன்றம் வழக்கை டிசம்பர் 9க்கு ஒத்திவைத்தது -உயர் நீதிமன்றம்.

 திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை ,டிசம்பர் 9க்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.

Bismi

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாவட்டம் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 4 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.பக்தர்கள் திரண்ட நிலையில், நீதிமன்ற தீர்ப்பை ஏற்க போலீசார் மறுத்தனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் மனுதாரர் 10 பேர் சென்று தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இதை சுட்டிக்காட்டி போலீசார், மத்தியப் படையினரை திருப்பி அனுப்பினர்.

நீதிமன்றம் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று (டிசம்பர் 05) காலை 10.45 மணிக்கு மீண்டும் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் நீதிபதி ஜிஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமி நாதன் வழக்கு விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்