வெறித்தனமாக கிளம்பிய பூகம்பம் முடிவில் புஸ்வானம் ஆனது – தலைவன் தலைவி விமர்சனம்
வெறித்தனமாக கிளம்பிய பூகம்பம் முடிவில் புஸ்வானம் ஆனது – தலைவன் தலைவி விமர்சனம்
தலைவன் தலைவி குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம்
குடும்ப சென்டிமென்ட் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை கதைகளின் மூலம் வெற்றியை கொடுத்த பாண்டிராஜ்
மீண்டும் அதே களத்தை கையில் எடுத்துள்ள படம் ‘தலைவன் தலைவி’ ‘மகாராஜா’வுக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு நல்ல ஓபனிங் உடன் வெளியாகியுள்ளது.
‘தலைவன் தலைவி’ கதைக்களம்
மதுரையில் ஃபேமஸான பரோட்டா கடை வைத்திருப்பவர் ஆகாசவீரன் (விஜய் சேதுபதி). பக்கத்து ஊரைச் சேர்ந்த அரசியுடன் (நித்யா மேனன்) ஆகாசவீரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
பெண் வீட்டுக்கு வித்தியாச வித்தியாசமாக பரோட்டா போட்டுக் கொடுத்து விஜய் சேதுபதி காதலிக்கத் தொடங்குகிறார். இருவரும் மனதளவில் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் ஹீரோவின் பின்னணியை தெரிந்துகொள்ளும் ஹீரோயின் குடும்பத்தினர் இந்த வரன் வேண்டாம் என்று சொல்கின்றனர். மற்றொரு பக்கம் ஹீரோ அம்மாவிடம் ஜோசியக்காரர் நாயகியை திருமணம் செய்தால் எதிர்காலத்தில் நீங்கள் மருமகளால் ஒதுக்கப்படுவீர்கள் என்று ஜோசியக்காரர் சொல்வதை கேட்டு இந்த திருமணம் வேண்டாம் என்று நினைக்கும் பொழுது,
திடீர் ட்விஸ்ட் கொடுப்பது போல ஹீரோயின் வீட்டாரின் எதிர்ப்பையும் தாண்டி, கருப்பு கோவிலுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்கிறார் ஹீரோ.
நன்றாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் இல்லை (ஹோட்டல் வாழ்க்கையில்) மாமனார் ஹீரோயினி கல்லாவில் உட்கார வைக்க ஹீரோ அம்மாவின் ஈகோ வெடிக்கிறது அதன் பிறகு மாமியார் – மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை என ஆரம்பிக்கும் விரிசல் போகப் போக பெரிதாகி ஒரு கட்டத்தில் கணவன் – மனைவி இருவரும் பிரியும் நிலைக்கு வந்துவிடுகிறது.
இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா என்பதை ‘தலைவன் தலைவி’ கதைக்களம்
பாண்டியராஜ் தனது முந்தைய படங்களில் உறவுகளின் புனிதம், குடும்பத்தின் பெருமை பற்றி பேசியது போல் அதே உறவுகளால் ஏற்படும் சிக்கல்கள், சொந்தக்காரர்கள் என்ற பெயரில் கணவன் – மனைவிக்கு நடுவே ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகள் கூட சுற்றி இருப்பவர்களால் எப்படி பூதாகரமாகிறது என்பதை படம் முழுக்க கலகலப்பாக சொல்லி இருக்கிறார்.
படத்தில் வரும் சின்னச் சின்ன தருணங்கள் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கின்றன. குறிப்பாக நித்யா மேனனை பெண் பார்க்க வரும்போது நடக்கும் காட்சிகள், நித்யா மேனனை ஹீரோவின் அப்பா சரவணன் கல்லாவில் உட்கார சொன்னபிறகு வீட்டில் தொடங்கும் ஈகோ பிரச்சினை, அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள், யோகி பாபு டைமிங் காமெடி ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம். பாண்டிராஜின் முந்தைய படங்களைப் போல இதில் வரும் அனைவரும் நல்ல குணத்தின் மறு உருவம் அல்ல. கிட்டத்தட்ட படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களிடமும் பிரச்சினை இருப்பதாக காட்டியிருப்பதும் அதற்காக வைக்கப்பட்ட காட்சிகளும் சிறப்பாக உள்ளது, இயக்குனர் படத்தில் புத்திசாலித்தனமாக ஹீரோ ஹீரோயின் மகளுக்கு மொட்டை அடிக்கும் காட்சியை படம் முழுவதும் எதிர்பார்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
படத்தின் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனனை சுற்றி நடக்கும் கதை என்பதால் இருவருக்குமே சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. விஜய் சேதுபதி ஹீரோசும் காட்டுவதற்கான கதைகளும் இருந்தும் அதனைத் தவிர்த்து நேச்சுரலாக நடிப்பது தனித்து காணப்படுகிறது, ஹீரோயின் நித்யா மேனன் கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது நடிப்பை வெகுவாக வெளிப்படுத்தி இருக்கிறார், இந்த இருவருக்கும் அடுத்தபடியாக படம் முழுக்க ஸ்கோர் செய்பவர் ஹீரோவின் அம்மாவாக வரும் தீபா சங்கர், அம்மா கதாபாத்திரம் சிறப்பாக நடித்துள்ளார், இப்படத்தின் மூலம் அவருக்கு தமிழில் பல கதவுகளை திறக்கலாம்.
’பாரதி கண்ணம்மா’ தொடர்ச்சியில் நடித்த ரோஷினிக்கு இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார் இயக்குனர்,
அதை நிறைவாக செய்திருக்கிறார். சரவணன், செம்பன் வினோத், ஜானகி சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, யோகி பாபு என படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் சிறப்பாக செய்திருக்கின்றனர். தலைவன் தலைவி படத்தில் பரோட்டாவை படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக பாவித்திருப்பது ரசிக்கும்படி இருந்தது. படத்தின் ஆரம்ப காட்சிகள் பரோட்டா பிரியர்களை வாய் ஊற வைக்கும் அளவிற்கு அத்தனை வகை புரோட்டாக்களையும் காண்பித்துள்ளனர்.
படத்தின் குறையென்று பார்த்தால் நித்யா மேனனும் விஜய் சேதுபதியும் சண்டை போடும் காட்சிகளில் இருவரும் மாறி மாறி கத்திக் கொண்டே இருப்பது ஓரளவுக்கு மேல சலிப்பை ஏற்படுத்துகிறது.
அதேபோல எம்எல்ஏவின் ஆட்கள் இரு குடும்பத்துக்கும் இடையே பஞ்சாயத்து செய்வதாக வரும் காட்சிகள், திரும்ப திரும்ப இரு குடும்பமும் மாறி மாறி சண்டையிடும் காட்சிகள் நெளிய வைக்கின்றன. ஒரு காட்சியில் மைனா நந்தினி ‘இவங்க இன்னும் முடிக்கலையா?’ என்று சொல்வார்கள் அதுதான் பார்ப்பவர்களுக்கு தோன்றுகிறது.
படமே முடிந்தும் கூட சண்டை முடியவில்லை. விவாகரத்து குறித்த காட்சிகளை நகைச்சுவையாக காட்சிப்படுத்தியிருப்பது சரிதான். ஆனால் ஒட்டுமொத்தமாக விவாகரத்து செய்பவர்களை எல்லாம் நோக்கி விஜய் சேதுபதி செய்யும் அட்வைஸ் சொல்வது தேவையற்றது. எல்லாருடைய சூழலும், காரணமும் ஒன்றாக அமைவதில்லை.
படத்திற்கு சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை பக்கபலம். பாடல்களில் ‘பொட்டல முட்டாயே’ குதூகலிக்க வைக்கிறது. எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு காட்சிகளின் தரத்தை கூட்டியிருக்கிறது.
திரைக்கதையை தொய்வின்றி நகர்த்த உதவிய எடிட்டர் பிரதீப் ராகவுக்கு ஸ்பெஷல் பாராட்டு.
சில குறைகள், சில இழுவைகள் இருந்தாலும் திருமணத்துக்கு பிந்தைய வாழ்க்கையை முடிந்தவரை கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொன்ன வகையில் ‘ஃபேமிலி என்டர்டெய்னர்’ ஜானரில் மீண்டும் ஒருமுறை ஜெயித்திருக்கிறார் பாண்டிராஜ்.
தியேட்டரில் இருந்து வெளியே வரும் மக்களின் மனம் பலவிதம் அதில் தலைவன் தலைவி படத்தின்
சோழன் பார்வையில்
வெட்டு, குத்து என்று படம் ஆரம்பிக்கும் என்று நினைத்து படம் பார்க்க ஆரம்பித்தோம் ஆனால் முற்றிலும் மாறுபட்டு நல்ல காமெடியாக அமைந்தது…
நல்ல கலகலப்பான படம் சிரிக்க வைத்தது,
படத்தில் கத்தி சண்டை போடுவதை கொஞ்சம் குறைச்சி இருக்கலாம்
மாமா மச்சான் சண்டை என்னவென்று சொல்லாதது சூப்பர்
வெறித்தனமாக கிளம்பிய பூகம்பம் முடிவில் புஸ்வானம் ஆனது
நிறைய ஹோட்டல் குடும்பத்தில் நடக்கும் சம்பவம் உண்மையானது
குடும்பத்துடன் பார்த்தால் நகைச்சுவையுடன் கணவன் மனைவி புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்
மொத்தத்தில் இது போன்ற குடும்ப படங்கள் தற்போது தமிழ் திரை உலகில் வரவேற்கப்படுகிறது பாராட்டுக்குரியது
Comments are closed.