தமிழகத்தை எப்பொழுதும் பாஜக அரசு புறந்தள்ளி தான் வருகிறது அதுதான் இந்த பட்ஜெட்டிலும் நடக்கும் – எம்.பி திருமாவளவன் பேட்டி!
வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
வேங்கை வயல் விவகாரத்தில்
அடுத்து இருக்கும் ஒரு வாய்ப்பு என்கிற அடிப்படையில் நம்பிக்கை இல்லையென்றாலும் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
பரபரப்புக்காக சீமான் காலப் பொருத்தம் இல்லாத கருத்தியல் பொருத்தம் இல்லாததை பேசி வருகிறார். பரபரப்புக்காக தான் அவர் அவ்வாறு பேசி வருகிறார். தன்னை நம்பி வரும் இளைஞர்களின் உணர்ச்சிகளை அரசியலுக்காக பயன்படுத்தவே அவர் அவ்வாறு பேசுகிறார் என்றார்.
*பெரியாரிடம் வெங்காயம் தான் உள்ளது, எங்களிடம் வெடிகுண்டு உள்ளது என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு…*
பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியது. பெரியாரின் வெங்காயம் தான் சனாதான சக்திகளை வேரூன்ற விடாமல் விரட்டி அடித்து கொண்டிருக்கிறது.
பெரியார் இந்தியா முழுமைக்கும் உள்ள சமூக நீதியின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்குமான தலைவர். சர்வதேச அளவில் அறிவியல் பூர்வமாக அணுகும் ஜனநாயக சக்திகளின் நம்பிக்கைக்குரிய தலைவர். அவரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல அந்த போக்கை சீமான் கைவிட வேண்டும்.
சென்னையில் காரில் சென்ற பெண்களை சிலர் துரத்தி சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்திருக்கிறார்கள். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் 24 மணி நேரமும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது குறித்தும், திமுக அரசை குறை கூறுவது மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை தாண்டி மக்கள் பிரச்சினை குறித்து அவர்கள் பேசுவதே இல்லை. திமுக அரசுக்கு எதிராக பேசுவது மட்டும் தான் அரசியல் என கருதுகிறார்கள்.
தமிழகத்தில் மக்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம் சமூக நல்லிணக்கம் நிலவுகிறது. தலித்களுக்கு எதிரான பிரச்சினைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சுமூகமான நிலை தான் உள்ளது.
மத்திய அரசு தமிழகத்தை எப்பொழுதும் புறக்கணித்தே வருகிறார்கள். அதுதான் வரும் பட்ஜெட்டிலும் நடக்கப்போகிறது. இருந்த போதும் தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக நாங்கள் பாராளுமன்றத்தில் பேசுவோம் தமிழ்நாட்டிற்கு தேவையானதை கேட்டு வலியுறுத்துவோம்
Comments are closed.