சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி!
சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி!

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவில் ஆடவருக்கான ‘சந்தோஷ் கோப்பை கால்பந்து’ போட்டி, ஆந்திரா மாநிலத்தின் அனந்தபூரில் நேற்று துவங்கியது.2025-26ம் ஆண்டுக்கான சந்தோஷ் கோப்பைக்கான 79-வது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று ஆந்திராவுடன் விளையாடியது.ஆந்திரா மாநிலத்தின் அனந்தபூரில் உள்ள ஆர்டிடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் அலெக்சாண்டர் ரோமாரியோ ஜெசுராஜ் (45 மற்றும் 65-வது நிமிடங்கள்) 2 கோல்கள் அடித்தார். தேவதத் (21-வது நிமிடம்), நந்தகுமார் அனந்தராஜ் (35-வது நிமிடம்), சுராஜ் குமார் (82-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். தமிழ்நாடு அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை வீழ்த்தியிருந்தது. தனது அடுத்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி நாளை (டிசம்பர் 21) புதுச்சேரி அணியுடன் மோதுகிறது.


Comments are closed.