தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு செயற்குழு கூட்டம்
தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன்
தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு செயற்குழு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் டாக்டர் கே.எஸ் சுப்பையா பாண்டியன் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டாக்டர் மகேஷ், டாக்டர் முனுசாமி, டாக்டர் சண்முகசுந்தரம், டாக்டர் முஸ்தபா, டாக்டர் ஷீலா, டாக்டர் கல்பனா, டாக்டர் சசிகுமார், டாக்டர் சோபியா, டாக்டர் சுரேஷ், டாக்டர் ராஜரிகன், டாக்டர் முகமது அலி, டாக்டர் வீரன், டாக்டர் சம்சுல் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தமிழகத்தில் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு, தகுதி அடிப்படையில் அரசு அங்கீகார வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் வேண்டுகோள் விடுகின்றது, மேலும் அக்குபஞ்சருக்கு என்று தமிழ்நாடு அக்குபஞ்சர் கவுன்சில் தமிழக அரசு அமைத்திட வேண்டுமென்று வேண்டுகோள் விடுகின்றது, மேலும் பக்க விளைவு இல்லாத அருமையாக மக்களுக்கு அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு அளிக்கக்கூடிய ஓர் அற்புத மருத்துவம் அக்குபஞ்சர் மருத்துவம், பண்டைய காலங்களில் போர் வீரர்களுக்கு வர்ம மருத்துவ மூலம் அருமையாக சிகிச்சை அளிக்கப்பட்டது நாம் அறிவோம், அந்த வர்மக்கலை தான் இன்று அக்குபஞ்சர் மருத்துவமனையாக உள்ளது. இது நம் மண்ணின் மருத்துவம் சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவான வர்மக்கலை சேர்ந்த ஒரு மருத்துவம் நமது அக்குபஞ்சர் மருத்துவம், இந்த அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு இந்திய அளவில் மகாராஷ்டிராவும், பெஸ்ட் பெங்கால் அங்கீகாரம் வழங்கி அக்குபஞ்சர் மருத்துவர்களை மருத்துவ சேவை செய்ய வைத்துள்ளனர். அது போல் தமிழக அரசும் இந்த மருத்துவத்திற்கு உயிர் கொடுத்து அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கி அவர்கள் மருத்துவ சேவையை மக்களுக்கு தொடர அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் என்ற கோரிக்கைகளை தீர்மானங்களாக தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றினர்.