திருப்பூர் யோகா அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு 

திருப்பூர் யோகா அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

 

 

திருப்பூர் யோகா அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றது. திருப்பூர் சேவா சமதி மஹாலில் நடந்த யோகாசனப் போட்டியில் 1500க்கும் மேற்பட்ட யோகா போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

 

Bismi

வினா ஸ்ரீ யோகா மையத்தின் 8 மாணவர்கள் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டதில் ஆண்கள் பிரிவில் எம்.ஹரிஷ், பெண்கள் பிரிவில் எஸ்.ஜெயஸ்ரீதனா முதலாவது இடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் எஸ்.தர்ஷன் மூன்றாம் இடம், பெண்கள் பிரிவில் நளினி இரண்டாம் இடம், ரெஜினா மூன்றாம் இடம், மதிலிகா ஐந்தாம் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றனர். ஏழு மற்றும் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறப்பு பெண்கள் பிரிவில் வேல்விழி முதலிடமும், அபிநயா மூன்றாம் இடமும் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர்.

 

அதேபோல் மாணவ, மாணவிகளின் வெற்றிக்கு ஊன்றுகோலாய் விளங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆசிரியர் காளத்தீஸ்வரன் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் அர்ச்சனா, வித்தியா ஆகியோருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்